ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பல விருதுகளை பெற்றவர் பிரபல தெலுங்குப்பட இயக்குனர் கே.விஸ்வநாத். இவருக்கு சமீபத்தில் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதுவரை 50 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள கே.விஸ்வநாத், தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என சில படங்களை இயக்கியவர், ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவரது இயக்கத்தில் 1980ல் வெளியான படம் சங்கராபரணம். இந்த படம் வருடக்கணக்கில் ஓடியது. பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டதோடு பல விருதுகளையும் பெற்று அவருக்கு பெருமை சேர்த்தது. இந்நிலையில், இந்த படத்தின் நினைவாக சங்கராபரணம் விருது வழங்கம் விழா ஐதராபாத்தில் நடந்தது.
இந்த ஆண்டு அறிமுக இயக்குநருக்கான சங்கராபரணம் விருது, ப.பாண்டி படத்தை இயக்கிய தனுஷூக்கு கிடைத்துள்ளது. தனுஷ் சார்பாக அவரது தந்தை கஸ்தூரி ராஜா, கே.விஸ்வநாத்திடம் விருதை பெற்றார்.
இதேப்போன்று மெட்ரோ படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் கே.விஸ்வநாத் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.