சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
மோகன்லால் நடித்து வசூலில் சாதனை படைத்த புலிமுருகன் படத்தை தமிழாக்கம் செய்தவர் ஆர்.பி.பாலா. கடந்த வெள்ளிக்கிழமை 300 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த கமாலினி முகர்ஜி தவிர மற்ற அனைத்து நடிகர் நடிகைகள் தமிழில் டப்பிங் பேசியுள்ளனர். இதனை சிறப்பாக செய்த ஆர்.பி.பாலாவை மோகன்லால் பாராட்டி உள்ளார். இதுகுறித்து ஆர்.பி.பாலா கூறியதாவது:
நான் டப்பிங் துறையில் 22 ஆண்டுகளாக இருக்கிறேன். பல நடிகர்களுக்கும் டிவி, தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் இன்ஜினியர், எடிட்டர் எனவே இதுபற்றி நுணுக்கமாகக் கற்றுக் கொண்டேன். பிறகு வசனத்தின் மீது ஆர்வம் பிறந்தது. தெலுங்கில் 1500 படங்களுக்கு வசனம் எழுதியவர் வசந்த்குமார். அவருடன் இருந்து வசனம் எழுதுவதன் நுணுக்கத்தைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு பிடித்தப் படங்களுக்கு வசனம் எழுதினேன். படங்களும் தயாரித்தேன்.
பாகுபலி ஒரு டப்பிங் படமாக பெரிய வெற்றி பெற்ற படம். அதைப்போல புலிமுருகன் படத்தையும் தமிழில் கொண்டுவர நினைத்தார்கள். மலையாளத்தில் படத்தைத் தயாரித்த முலக்குப் பாடம் டோமிச்சன் என்னை அழைத்தார்கள். வசனம் எழுத ஒப்பந்தம் செய்தேன். டப்பிங்கில் பெரிதும் கவனம் செலுத்தினேன். பொதுவாக ஒரு டப்பிங் படமென்றால் ஐந்தாறு நாட்களில் பேசி முடித்து விடுவார்கள். இதற்கு 45 நாட்கள் எடுத்துக் கொண்டேன்.
மோகன்லால் சார் ஒருநாள் டப்பிங்கிற்கு தேதி கொடுத்தார். நான் அவரைப் பாடாய்ப் படுத்தி அந்த ஒரு நாளில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் பேச வைத்தேன். என் ஈடுபாட்டைப் பார்த்து உன் விருப்பப்படி செய் என்று மேலும் 5 நாள் பேசி ஒத்துழைத்தார். இங்கு ரஜினி சார் மாதிரி கேரளாவில் அவர்தான் சூப்பர் ஸ்டார். முதலில் அவரை அணுக எனக்கு பயம், தயக்கம் இருந்தது. ஆனால் அவர் சகஜமாகப் பழகினார். டப்பிங் ஒப்பந்தமான போதே என்னை அவருக்குப் பிடித்து விட்டது. என்னை எப்போது பார்த்தாலும் புலி பாலா என்றே கூப்பிடுவார். என்னை அன்பாக ஒரு விருந்தினரைப் போல அவ்வளவு கவனித்து அன்பு காட்டினார். என்கிறார் பாலா.