வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'பாகுபலி 2' படம் மூலம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு இயக்குனராக மாறிவிட்டார். அவருடைய இயக்கத்தில் நடிக்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்ட போதும் இப்போதைக்கு முடிவு செய்யவில்லை என்றே பதிலளித்து வந்தார் ராஜமௌலி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய அடுத்த படம் குறித்த கேள்விக்கு கொஞ்சமாக பதிலளித்திருக்கிறார். “என்னுடைய அடுத்த படம் 'பாகுபலி 2' போன்று விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகம் உள்ள படமாக இருக்காது. என்னுடைய அப்பாவிடம் உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒரு கதையை எழுதும்படி கேட்டிருக்கிறேன். அவர் அந்தக் கதையை எழுதி முடித்ததும்தான், அதில் யார் யார் நடிப்பார்கள் என்பதை முடிவு செய்வேன். உணர்வுகளை மையப்படுத்திய படங்களை எடுப்பது தான் எனது விருப்பம்,” என்று பதிலளித்திருக்கிறார்.
ஏற்கெனவே பல ஹீரோக்கள் ராஜமௌலி படத்தில் நடிப்பதற்கு அவருக்கு தூது அனுப்பியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்தன. பிரம்மாண்டமானப் படமாக இல்லை என்றாலும் பிரமாதமான படமாக அவர் எடுத்துவிடுவார் என்பதுதான் அவர்களது நம்பிக்கை. ஆர்வமுடன் இருப்பவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பது ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் கதை எழுதி முடித்த பிறகே தெரியும்.