இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோர் நடித்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் படம் இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். சில பல காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கடைசியில், ரம்ஜான் விடுமுறையை கருத்தில் கொண்டு ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக, சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஜெயம் ரவி நடிப்பில், விஜய் இயக்கத்தில் வனமகன் ஆகிய இரண்டு படங்களும் ஜூன் 23 வெளிவருவது உறுதியானதால் நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது இப்படம் ஜூன் 30 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர். ஜூன் 23 அன்று நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகி இருந்தால், அதே தேதியில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படமும் வெளிவருவதால் தான் இசையமைத்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியான பெருமை யுவனுக்குக் கிடைத்திருக்கும். நெஞ்சம் மறப்பதில்லை படம் ஜூன் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதால் அந்தப்பெருமை கிடைக்காமல் போய்விட்டது.