சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
செல்வராகவன், தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குனர்களில் ஒருவர். என்னதான் வித்தியாசமான படமாகக் கொடுத்தாலும் கடைசியில் அந்தப் படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் பெற்றது, எவ்வளவு லாபத்தைக் கொடுத்தது என்றுதான் சினிமாவில் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் செல்வராகவன் கடைசியாக இயக்கிய 'புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்' ஆகிய நான்கு படங்களுமே தோல்விப் படங்கள்தான். அவரின் முதல் இரண்டு படங்களான 'காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி' ஆகிய படங்கள்தான் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள்.
'இரண்டாம் உலகம்' படம் தவிர்த்து அவர் இயக்கிய 'புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன' ஆகிய படங்கள் இன்றும் சிலாகித்துப் பேசப்படும் படங்கள் தான். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் படமாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் அடுத்த வாரம் ஜுன் 30ம் தேதி வெளியாக உள்ளது.
மீண்டும் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி, எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா என செல்வராகவன் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் நட்சத்திரங்கள் என அப்படத்திற்கு சில சிறப்புகள். பேய்ப் படமாக இருந்தாலும் இது செல்வராகவன் படம் என சொல்ல வைக்கும் படமாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மூலம் செல்வராகவன் மீண்டும் பேசப்படுவார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.