ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரிய நடிகர்களின் படங்கள் எந்த நேரத்தில் வெளியானாலும் நல்ல ஒப்பனிங் கிடைத்துவிடும் தான். அனால் அந்த ஒப்பனிங்கை தக்கவைத்துக்கொண்டு வசூலாக மாற்ற வேண்டும் என்றால் ஒன்று பண்டிகை காலமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் விடுமுறையாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி தொடர் விடுமுறையாக கிடைத்த ஓர் அரிய வாய்பை தெலுங்கு சினிமாவின் மும்மூர்த்திகளான மகேஷ்பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர்., என மூவருமே கோட்டை விட்டுள்ளார்கள் என்பது தான் ஆச்சர்யம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்', ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜெய் லவகுசா, த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படம் என இவை மூன்றுமே ஆகஸ்ட்-11ல் தான் ரிலீஸ் என முதன்முதலாக ரிலீஸ் தேதியை குறித்து வைத்தார்கள்.. ஆனால் தொழில்நுட்ப வேலைகள் முடிவடையாதது, ஷூட்டிங் தாமதம் என ஓவொரு காரணங்களால் இந்த மூன்று படங்களும் இந்த ஆகஸ்ட்-11ல் ரிலீஸாக முடியாது என்பது திட்டவட்டமாகியுள்ளது..
இந்த ஆகஸ்ட்-11ஐ தொடர்ந்து வரும் நான்கு நாட்களும் தொடர் விடுமுறை என்பது எவ்வளவு உற்சாகமான விஷயம்.. ஆனால் இந்த ஐந்து நாட்களையும் இந்த மூவரில் ஒருவர் படம் கூட கைப்பற்றாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.. மகேஷ்பாபு படம் செப்-27க்கும், ஜூனியர் என்.டி.ஆர் படம் தசாராவுகும் ரிலீஸாக இருக்கிறது.. பவன் கல்யாண் படம் தசராவா இல்லை சங்கராந்தி ரிலீசா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த மூவரின் படம் வெளியாகததால் நானியின் 'லை', ராணாவின் நானே ராஜூ நானே மந்திரி' மற்றும் சாய் தரம் தேஜின் 'ஜவான்' ஆகிய படங்கள் இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொள்ள முண்டியடித்து வருகின்றனவாம்.