தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
விஜய் நடித்த 'பைரவா', சிம்பு நடிக்கும் 'ஏஏஏ' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் சத்யா. இவர் தற்போது நடிகராகியிருக்கிறார். தான் எதற்காக நடிகரானேன் என்பதை அவரே கூறுகிறார்...
"என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானோ என்னுடைய விருப்பப்படி ஆடை வடிவமைப்பாளராகிவிட்டேன். என்னுடைய தந்தையின் கனவை நனவாக்க தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளேன்.
என்னுடைய இலக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான். அதற்காகவே நான் நடிக்கத் தொடங்கினேன். சின்ன சின்ன கேரக்டரில் ஏழு படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றார்கள். அதனால் தற்போது நல்ல நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன்.
ஜீவா, வெற்றிவேல், கிடாரி, பொதுவாக எம்மனசு தங்கம், ஏஏஏ, இரும்பு திரை ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 'ஏஏஏ' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை கஸ்தூரியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படம் இந்த மாதம் வெளியாகிறது. இந்த படம் வெளியான பின் என்னைத் தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறேன். விஷால் நடிக்கும் 'இரும்புத்திரை'-யிலும் நல்லதொரு கேரக்டரில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளேன்" என்றார் சத்யா.