'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்த 'பைரவா', சிம்பு நடிக்கும் 'ஏஏஏ' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் சத்யா. இவர் தற்போது நடிகராகியிருக்கிறார். தான் எதற்காக நடிகரானேன் என்பதை அவரே கூறுகிறார்...
"என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானோ என்னுடைய விருப்பப்படி ஆடை வடிவமைப்பாளராகிவிட்டேன். என்னுடைய தந்தையின் கனவை நனவாக்க தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளேன்.
என்னுடைய இலக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான். அதற்காகவே நான் நடிக்கத் தொடங்கினேன். சின்ன சின்ன கேரக்டரில் ஏழு படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றார்கள். அதனால் தற்போது நல்ல நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன்.
ஜீவா, வெற்றிவேல், கிடாரி, பொதுவாக எம்மனசு தங்கம், ஏஏஏ, இரும்பு திரை ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 'ஏஏஏ' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை கஸ்தூரியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படம் இந்த மாதம் வெளியாகிறது. இந்த படம் வெளியான பின் என்னைத் தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறேன். விஷால் நடிக்கும் 'இரும்புத்திரை'-யிலும் நல்லதொரு கேரக்டரில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளேன்" என்றார் சத்யா.