மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
விஜய் நடித்த 'பைரவா', சிம்பு நடிக்கும் 'ஏஏஏ' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் சத்யா. இவர் தற்போது நடிகராகியிருக்கிறார். தான் எதற்காக நடிகரானேன் என்பதை அவரே கூறுகிறார்...
"என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானோ என்னுடைய விருப்பப்படி ஆடை வடிவமைப்பாளராகிவிட்டேன். என்னுடைய தந்தையின் கனவை நனவாக்க தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளேன்.
என்னுடைய இலக்கு ஆண்டுதோறும் நடைபெறும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான். அதற்காகவே நான் நடிக்கத் தொடங்கினேன். சின்ன சின்ன கேரக்டரில் ஏழு படங்களில் நடித்திருக்க வேண்டும் என்றார்கள். அதனால் தற்போது நல்ல நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன்.
ஜீவா, வெற்றிவேல், கிடாரி, பொதுவாக எம்மனசு தங்கம், ஏஏஏ, இரும்பு திரை ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 'ஏஏஏ' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை கஸ்தூரியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படம் இந்த மாதம் வெளியாகிறது. இந்த படம் வெளியான பின் என்னைத் தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறேன். விஷால் நடிக்கும் 'இரும்புத்திரை'-யிலும் நல்லதொரு கேரக்டரில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளேன்" என்றார் சத்யா.