'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்த் திரையுலகத்தில் பெரிய படம், சிறிய படம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்துப் படங்களின் சாட்டிலைட் உரிமைகளையும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கி வந்தன. ஆனால், கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்களையோ அல்லது சுமாராக ஓடிய படங்களையே மட்டும்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்குகின்றன.
அதிலும் நான்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டும்தான் கோடிகளைக் கொடுத்து படங்களை வாங்குகின்றன. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் லட்சங்களில் கூட படங்களைக் கொடுத்து வாங்குவதில்லை. அதனால்தான் தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்தன.
தயாரிப்பாளர் சங்கத்தின் முந்தைய நிர்வாகமும் இதற்காக பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், தொலைக்காட்சி நிறுவனங்கள் அதற்கு சரிவர ஒத்துழைக்கவில்லை. தற்போது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கமும் அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
கடந்த சில வருடங்களில் வெளியான நூற்றுக்கணக்கான படங்கள் இன்னமும் தொலைக்காட்சி உரிமை விற்ககப்படாமல் அப்படியே முடங்கிக் கிடக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் படங்களை வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு புதிய படங்களின் பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் முயற்சி எடுத்தது. ஆனால், அது கட்டுப்பாடாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது.
ஓடாத படங்களை வாங்கி நாங்கள் என்ன செய்வது என தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் சொல்லப்படுகிறது. அதே சமயம் புதிய படங்களின் பாடல்களை அவர்கள் நேரடியாக தயாரிப்பாளர்களை அணுகி வாங்கி விடுகிறார்கள்.
சாட்டிலைட் உரிமை வாங்கும் படங்கள் மட்டும்தான் இனி புதிய படங்களின் பாடல்களை ஒளிபரப்ப முடியும் என கட்டாயப்படுத்தினால் இதற்கு வழி பிறக்கும் என சிறிய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
இதுவரை எந்த ஒரு பெரிய படத்தையும் வாங்கும் நிறுவனங்கள் படம் வாங்கிய உடனேயே அது பற்றி எந்தச் செய்தியையும் வெளியில் சொல்ல மாட்டார்கள். மாறாக, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தை வாங்கிவிட்டோம் என பத்திரிகைச் செய்தி மூலமாக விஜய் டிவி தற்போது தெரியப்படுத்தியுள்ளது திரையுலகத்தில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.