மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், தற்போது "பூமி" என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஆரம்ப் சிங் இயக்கும், "மலாங்" என்ற படத்தில் சஞ்சய் நடிக்க உள்ளார். சஞ்சய் தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வேண்டும் இயக்குநரிடம் சொல்ல, தற்போது அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து இயக்குநர் ஆரம்ப் கூறியிருப்பதாவது... "சஞ்சய் தன்னுடன் ஐஸ்வர்யா நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏற்கனவே இவர்கள் இணைந்து நடித்த சாப்த் படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருந்தது. அதேஅளவு கெமிஸ்ட்ரியை இப்போது மீண்டும் ரசிகர்களிடத்தில் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். சஞ்சய் தத் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான காதல் படத்தில் நடிக்க உள்ளார், நிச்சயம் அது ரசிகர்களுக்கு பிடிக்கும்" என்றார்.
மலாங் படத்தின் முதன்மை நாயகி, சிபிஐ., அதிகாரியாக நடிக்க, அவரை காதலிப்பவராக சஞ்சய் தத் நடிக்க உள்ளார். முற்றிலும் ஒரு வித்தியாசமான ரொமான்ட்டிக் திரில்லர் படமாக மலாங் உருவாக உள்ளது. மலாங் படத்தை பூஷண் குமார், சந்தீப் குமார் மற்றும் ஓமங் குமார் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.