துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், தற்போது "பூமி" என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஆரம்ப் சிங் இயக்கும், "மலாங்" என்ற படத்தில் சஞ்சய் நடிக்க உள்ளார். சஞ்சய் தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வேண்டும் இயக்குநரிடம் சொல்ல, தற்போது அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து இயக்குநர் ஆரம்ப் கூறியிருப்பதாவது... "சஞ்சய் தன்னுடன் ஐஸ்வர்யா நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஏற்கனவே இவர்கள் இணைந்து நடித்த சாப்த் படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருந்தது. அதேஅளவு கெமிஸ்ட்ரியை இப்போது மீண்டும் ரசிகர்களிடத்தில் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். சஞ்சய் தத் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான காதல் படத்தில் நடிக்க உள்ளார், நிச்சயம் அது ரசிகர்களுக்கு பிடிக்கும்" என்றார்.
மலாங் படத்தின் முதன்மை நாயகி, சிபிஐ., அதிகாரியாக நடிக்க, அவரை காதலிப்பவராக சஞ்சய் தத் நடிக்க உள்ளார். முற்றிலும் ஒரு வித்தியாசமான ரொமான்ட்டிக் திரில்லர் படமாக மலாங் உருவாக உள்ளது. மலாங் படத்தை பூஷண் குமார், சந்தீப் குமார் மற்றும் ஓமங் குமார் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.