ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மும்பையில், பிரபல நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் மும்பையில், பாலிவுட் நடிகர், நடிகையர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு குடியிருந்த, போஜ்புரி நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, நேற்று, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதலே, மொபைல் போன் அழைப்புகளை ஏற்காததால் சந்தேகம் அடைந்த அஞ்சலியின் உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவரின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மின் விசிறியில் தொங்கியபடி இருந்த அஞ்சலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலி தன் காதலன் ஒருவருடன் அந்த வீட்டில் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.