ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பையில், பிரபல நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் மும்பையில், பாலிவுட் நடிகர், நடிகையர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு குடியிருந்த, போஜ்புரி நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, நேற்று, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதலே, மொபைல் போன் அழைப்புகளை ஏற்காததால் சந்தேகம் அடைந்த அஞ்சலியின் உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவரின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மின் விசிறியில் தொங்கியபடி இருந்த அஞ்சலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலி தன் காதலன் ஒருவருடன் அந்த வீட்டில் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.