தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மும்பையில், பிரபல நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் மும்பையில், பாலிவுட் நடிகர், நடிகையர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு குடியிருந்த, போஜ்புரி நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, நேற்று, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதலே, மொபைல் போன் அழைப்புகளை ஏற்காததால் சந்தேகம் அடைந்த அஞ்சலியின் உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவரின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மின் விசிறியில் தொங்கியபடி இருந்த அஞ்சலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலி தன் காதலன் ஒருவருடன் அந்த வீட்டில் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.