அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி என்ற பெயரில் வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும், எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இதனால் ஜிஎஸ்டி வரி குறித்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக அமிதாப் பச்சனை, ஜிஎஸ்டி விளம்பர தூதுவராக மத்திய அரசு நியமித்துள்ளது.
முதல் கட்டமாக அமிதாப் நடித்துள்ள 20 விநாடி விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் தேசிய கொடியின் மூவர்ணம் போல ஜி.எஸ்.டி ஒருங்கிணைந்த தன்மை கொண்டது என்று அந்த விளம்பர படத்தில் மக்களுக்கு கூறுகிறார். ஒரே தேசம், ஒரே வரிவிதிப்பு, ஒரே சந்தை என்ற தாராக மந்திரத்தை சொல்கிறார். அமிதாப்புக்கு முன்பு ஜிஎஸ்டியின் தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கணை பி.வி.சிந்து நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.