வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதும் உலகறிந்த ரகசியம். ஜெய், அஞ்சலி இணைந்து தற்போது பலூன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஜெய் பிறந்தநாள் வந்தது. படத்தின் இயக்குனர் ஷினிஷூம், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயனும் ஐதராபாத்திலிருந்த அஞ்சலியை, ஜெய்க்கு தெரியாமல் வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தனர். அதேபோன்று சிலதினங்களுக்கு முன்னர் அஞ்சலிக்கு பிறந்தநாள் வந்தபோது ஜெய், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தையே காதலை சொல்வது போன்று சொன்னார். இந்நிலையில் பலூன் படத்தை பற்றி நேற்று பேட்டியளித்த இயக்குனர் ஷினிஷ், ஜெய், அஞ்சலி காதல் பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
பலூன் படத்தில் இன்னொரு நடிகைதான் நடிப்பதாக இருந்தது. சம்பளம், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்கவில்லை. அப்போதுதான் ஜெய் ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைப்பது என்று முடிவு செய்தோம். இதை ஜெய்யிடம் சொன்னபோது எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. அஞ்சலியிடம் அப்பாயின்மெண்ட் வாங்கித் தருகிறேன். நீங்களே கதை சொல்லுங்கள் பிடித்தால் நடிக்கட்டும் என்றார். அஞ்சலியிடம் கதை சொன்னோம், நடிக்க ஒத்துக் கொண்டார். படப்பிடிப்பில் ஒரு ஹீரோவும், ஹீரோயினும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படித்தான் நடந்து கொண்டார்கள். பிறந்த நாள் சர்ப்ரைஸ் விஷயம் இருவரையும் சந்தோஷப்படுத்த நடந்த நிகழ்வு.
அவர்கள் நிஜ காதல் பற்றி தெரியாது. ஆனால் படத்தில் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்டாகி உள்ளது. அவர்கள் காதல் பற்றி வரும் செய்திகள் பலூன் படத்திற்கு பிளஸ்சாக உள்ளது. அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி. என்கிறார் ஷினிஷ்.