தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி நடிக்கும் காலா படத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார் மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ். அவரைப் பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்...
அழகும் திறமையும் இருந்தும் அதிக படங்களில் நடிக்காதவர் ஆந்திராவைச் சேர்ந்த ஈஸ்வரி ராவ். 1990ம் ஆண்டு கவிதை பாடும் அலைகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு நாளைய தீர்ப்பு, ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அப்பு, குட்டி, விரும்புகிறேன். படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே ஹீரோயின் வாய்ப்புகளை இழந்து குணசித்ர நடிகையானார். திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் தெலுங்கில் தொடர்ந்து குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் நேனு லோக்கல் படத்தில் நானியின் அம்மாவாக நடித்தார்.
காலா படத்தில் ரஜினியின் வயதான கேரக்டரில் அவரது மனைவியாக நடிக்க ஈஸ்வரிராவை தேர்ந்தெடுத்தார் தனுஷ். இதுகுறித்து ஈஸ்வரி ராவ் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் நான் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தபோது கூட நினைக்கவில்லை. ஆனால் கடவுள் எனக்கு இப்படி வாய்ப்பை கொடுத்திருக்கிறான். என்னை விட என் குழந்தைகளுக்குதான் பெரிய ஷாக்காக இருந்தது. அவர்களுக்கு பிடித்த ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்பதை அவர்கள் இன்னும் முழுசாக நம்பவில்லை. என்னுடைய கேரக்டர் பற்றி விரிவாக சொல்ல முடியாது. அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார் ஈஸ்வரி ராவ்.