‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கேட்பதற்கு கொஞ்சம் தமாஷாகத் தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மை. 25 வருடங்களுக்கு முன் கவுண்டமணி-செந்தில் காமெடிகளில் அனைவராலும் ரசிக்கப்பட்ட காமெடிகளில் ஒன்று தான் இன்சூரன்ஸ் காமெடி. அதில் செந்தில் தான் இறந்துவிட்டதாக நடித்து தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை கவுண்டமணி மூலம் பெற முயற்சிப்பார், இறுதியில் அவர்கள் குட்டு உடைபட்டு விடும்.. இதே வேலையை ஒருத்தர் நிஜத்தில் வயலன்ஸ் ஆக செய்தால்..? அதாவது தான் தற்கொலை பண்ணிக்கொள்ளாமல் இன்னொருவரை எரித்து தான் இறந்தது போல நம்ப வைத்தால்..? இப்படிப்பட்ட கிரிமினல் ஒருவனின் கேரக்டரில் தான் துல்கர் சல்மான் அடுத்ததாக நடிக்க இருக்கிறார்
ஆம், 1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலை வழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு. சுகுமார குறூப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக்கொன்றான். பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சுகுமார குறூப் கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறாராம். சினிமாவுக்காக இந்த கேரக்டரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்களாம். 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.