இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகில் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தின் படப்பிடிப்பு நடப்பது இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். ஆம், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கி நாட்டில் நடந்து வருகிறது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது.
முதல் பாகத்தின் படப்பிடிப்புடன் சேர்த்தே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை 2012ம் ஆண்டிலேயே கமல்ஹாசன் முடித்துவிட்டார். முதல் பாகம் சில அரசியல் காரணங்களால் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகாமல் ஒரு வாரம் கழித்துதான் வெளியானது. அதன்பின் அந்த ஆண்டின் கடைசியில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் பிரச்சனை வந்ததால் இரண்டாம் பாகத்தின் வெளியீடு அப்படியே நின்று விட்டது.
சில வாரங்களுக்கு முன்புதான் அனைத்துப் பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டன. அதன்பின் கமல்ஹாசன் தற்போது துருக்கி சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். பின் சென்னையில் சில காட்சிகள் படமானதும் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடுகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.