வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ்த் திரையுலகில் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தின் படப்பிடிப்பு நடப்பது இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். ஆம், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கி நாட்டில் நடந்து வருகிறது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது.
முதல் பாகத்தின் படப்பிடிப்புடன் சேர்த்தே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை 2012ம் ஆண்டிலேயே கமல்ஹாசன் முடித்துவிட்டார். முதல் பாகம் சில அரசியல் காரணங்களால் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகாமல் ஒரு வாரம் கழித்துதான் வெளியானது. அதன்பின் அந்த ஆண்டின் கடைசியில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் பிரச்சனை வந்ததால் இரண்டாம் பாகத்தின் வெளியீடு அப்படியே நின்று விட்டது.
சில வாரங்களுக்கு முன்புதான் அனைத்துப் பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டன. அதன்பின் கமல்ஹாசன் தற்போது துருக்கி சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். பின் சென்னையில் சில காட்சிகள் படமானதும் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடுகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.