தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் மது அருந்த மாட்டார், புகை பிடிக்க மாட்டார். அதுபோல இறந்தது போல நடிக்க மாட்டார் அதற்கு காரணமாக அமைந்தது பாசம் என்ற படம்.
1962ம் ஆண்டு வெளியான பாசம் படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கினார். இதில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி, அசோகன், ஷீலா, கல்யாண குமார், டி.ஆர்.ராமச்சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஜல் ஜல் என சலங்கையொலி... பால் வண்ணம் பருவம் கண்டேன்..., உலகம் பிறந்தது எனக்காக..., உறவு சொல்லி ஒருவரின்றி வாழ்பவன்... உள்ளிட்ட தேன் சொட்டும் பாடல்கள் இருந்தும் படம் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணம் கதைப்படி எம்.ஜி.ஆர் இறந்து விடுவதுதான்.
அவர் இறந்த காட்சியை பார்க்க பிடிக்காமல் மக்கள் தியேட்டருக்கு செல்லவில்லை. இதனால் இனி இறப்பது போன்று நடிப்பதில்லை என்று எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். இந்தப் படத்திற்கு முன்பு எம்.ஜி.ஆர் 1956ல் வெளிவந்த மதுரை வீரன் படத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு இறந்து விடுவார். ஆனால் அந்தப்படம் வெற்றி பெற்றது. காரணம் அந்த கதை மக்களிடையே இருந்த கதை. மதுரைவீரன் பொன்னி கதையை அவர்கள் கேட்டிருந்தார்கள். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரை மதுரை வீரனாக பார்த்தார்கள்.