டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜித்தை 'அமராவதி' படம் மூலம் அறிமுகம் செய்த இயக்குனர் செல்வா அதன் பின் பல வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் 'வணங்காமுடி'. இப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அரவிந்த்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிப்பதெல்லாம் எப்போதே ஒரு முறை நிகழக் கூடிய விஷயம். இயக்குனர் செல்வா இதற்கு முன் இயக்கிய 'நான் அவனில்லை' படத்தின் இரண்டு பாகங்களிலும் 5 ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். இப்போது இயக்கி வரும் 'வணங்காமுடி' படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள்.
பொதுவாக ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இடம் பெற்றாலே பல சச்சரவுகள் வரும் என்று சொல்வார்கள். அப்படியிருக்க இயக்குனர் செல்வா 4 ஹீரோயின்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து எப்படி திட்டமிட்டபடி படத்தை முடிக்கிறார் என்பதை வருங்கால இயக்குனர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.