Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொண்டன் தான் தலைவராக, முதல்வராக முடியும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

18 ஜூன், 2017 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Who-will-become-CM-and-Leader-:-SAC

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. நேற்று சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பட்டத்தை பெற்றுக் கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:


40 வருடங்களுக்கு முன்பு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உழைப்புதான். கடவுள் கூட கைவிடலாம், ஆனால் உழைப்பு ஒரு மனிதனை கைவிடாது என்பதற்கு என்னை நானே ஒரு உதாரணமாக சொல்லிக்கொள்வேன். எனது மகனாக இருந்தாலும் உழைப்பு என்பதை ஊட்டி வளர்த்தமையால்தான் இன்று இந்த அளவுக்கு பெரிய உயரத்தை அடைந்த பிறகும் இன்னும் அவர் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார் .


விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் எனது பிள்ளைகள்தான். அவர்களுக்கு நான் கற்றுக்கொடுத்திருப்பதும் உழைப்பு மட்டும் தான். எனக்கு ஓய்வு என்பதே பிடிக்காத விஷயம். விஜய்யை , விஜயகாந்தை , ரகுமானை , சிம்ரனை , சங்கரை உருவாக்கியிருக்கிறோம். இவ்வளவு சாதனை செய்துவிட்டோம் என்று ஒருபோதும் நான் எண்ணியது கிடையாது. புகழ்ச்சி என்ற போதைக்கு அடிமையாகிவிட்டால், நமது வளர்ச்சி அடங்கி போய்விடும்.


நான் என் தாயை 25 வருடம் எனது வீட்டில் மகாராணி போல் வாழ வைத்தேன். எனது தாயை சந்தோஷப்படுத்த, படுத்த எனது வளர்ச்சியும் பல மடங்காகியது. அதேபோல் தான் விஜய்யும். எந்த படப்பிடிப்பு இருந்தாலும் ஒருமுறையாவது ஷோபாவை பார்க்காமலோ, பேசாமலோ இருக்க மாட்டேன். அதனால்தான் கடவுள் உங்கள் இளைய தளபதியை இந்த உயரத்தில் வைத்திருக்கிறார்.


ஆகவே விஜய் ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் நான் கேட்பதெல்லாம், தாயை நேசியுங்கள். அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும். ஒவ்வொருவரும் எதாவது வகையில் முடிந்த அளவுக்கு தொண்டு செய்யுங்கள். தொண்டனாக இருப்பவனால் மட்டுமே தலைவனாக முடியும், முதல்வராக முடியும். இந்த டாக்டர் பட்டத்திற்கு நான் தகுதியுள்ளவனா என்று என்னை பரிசோதிக்கும்போது எனது உழைப்புக்காக அவர்கள் தந்த இந்த பரிசை, பட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.


கடைசிவரை ஓடிக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். எனது உழைப்பு நின்றுவிட்டால், நான் ஓய்வெடுக்கிறேன் என்றால், அது எனது இறுதி மூச்சை விட்ட இடமாகத்தான் இருக்கும் .


இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in