'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. நேற்று சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பட்டத்தை பெற்றுக் கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
40 வருடங்களுக்கு முன்பு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உழைப்புதான். கடவுள் கூட கைவிடலாம், ஆனால் உழைப்பு ஒரு மனிதனை கைவிடாது என்பதற்கு என்னை நானே ஒரு உதாரணமாக சொல்லிக்கொள்வேன். எனது மகனாக இருந்தாலும் உழைப்பு என்பதை ஊட்டி வளர்த்தமையால்தான் இன்று இந்த அளவுக்கு பெரிய உயரத்தை அடைந்த பிறகும் இன்னும் அவர் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார் .
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் எனது பிள்ளைகள்தான். அவர்களுக்கு நான் கற்றுக்கொடுத்திருப்பதும் உழைப்பு மட்டும் தான். எனக்கு ஓய்வு என்பதே பிடிக்காத விஷயம். விஜய்யை , விஜயகாந்தை , ரகுமானை , சிம்ரனை , சங்கரை உருவாக்கியிருக்கிறோம். இவ்வளவு சாதனை செய்துவிட்டோம் என்று ஒருபோதும் நான் எண்ணியது கிடையாது. புகழ்ச்சி என்ற போதைக்கு அடிமையாகிவிட்டால், நமது வளர்ச்சி அடங்கி போய்விடும்.
நான் என் தாயை 25 வருடம் எனது வீட்டில் மகாராணி போல் வாழ வைத்தேன். எனது தாயை சந்தோஷப்படுத்த, படுத்த எனது வளர்ச்சியும் பல மடங்காகியது. அதேபோல் தான் விஜய்யும். எந்த படப்பிடிப்பு இருந்தாலும் ஒருமுறையாவது ஷோபாவை பார்க்காமலோ, பேசாமலோ இருக்க மாட்டேன். அதனால்தான் கடவுள் உங்கள் இளைய தளபதியை இந்த உயரத்தில் வைத்திருக்கிறார்.
ஆகவே விஜய் ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் நான் கேட்பதெல்லாம், தாயை நேசியுங்கள். அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் காலடியில் கிடக்கும். ஒவ்வொருவரும் எதாவது வகையில் முடிந்த அளவுக்கு தொண்டு செய்யுங்கள். தொண்டனாக இருப்பவனால் மட்டுமே தலைவனாக முடியும், முதல்வராக முடியும். இந்த டாக்டர் பட்டத்திற்கு நான் தகுதியுள்ளவனா என்று என்னை பரிசோதிக்கும்போது எனது உழைப்புக்காக அவர்கள் தந்த இந்த பரிசை, பட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
கடைசிவரை ஓடிக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். எனது உழைப்பு நின்றுவிட்டால், நான் ஓய்வெடுக்கிறேன் என்றால், அது எனது இறுதி மூச்சை விட்ட இடமாகத்தான் இருக்கும் .
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.