பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஏஏஏ என்கிற அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். ஏஏஏ படம் வெளியாக உள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், மீண்டும் அஜித்தை வம்புக்கு இழுப்பதுபோல் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
"அஜித் உடைய தோல்வியடைந்த படத்தின் கட்-அவுட்டை வைத்து தல என்று கத்தியவன் நான். தற்போது அவர் வளர்ந்துவிட்டார். இனிமேல் அஜித்தைப் பற்றி நான் பேச மாட்டேன்.” என்று கூறியிருக்கும் சிம்பு, “இன்று, எனது கடின உழைப்பின் காரணமாக, எனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் ஒரு சிலர், நான் அஜித்தின் புகழை எனது வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடுவதாக சொல்கின்றனர். மற்றவர்கள் நினைப்பது குறித்து எனக்கு கவலையில்லை" என்று பதிலளித்துள்ளார் சிம்பு.