தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பிரித்து பார்த்தால் சைலன்ட் ஆக இருப்பார்கள்.. சேர்த்து பார்த்தால் வயலன்ட் ஆக இருப்பார்கள். நடிகர் அரவிந்த் ஆகாஷும் அப்படி ஒரு ஆள் தான். சோலோ ஹீரோ ரேஞ்சுக்கு அவர் நடித்த படங்கள் எல்லாம் ஊற்றிக்கொள்ள, நான்கு பேரில் ஒருவராக, பத்து பேரில் ஒருவராக மற்றவர்களுடன் இணைந்து நடிக்கும் படங்கள் தான் அவருக்கு கைகொடுக்கின்றன. அந்தப்படங்களில் மட்டும் அவர் தனித்து தெரிகிறார். சென்னை-28, கோவா, மங்காத்தா ஆகிய படங்களை பார்த்தாலே அது புரியும்..
சமீபத்தில் 'குற்றம்-23' படத்தில் மிக முக்கியமான வில்லன் கேரக்டரில் நடித்திருந்த அரவிந்த் ஆகாஷுக்கு அவரே எதிர்பாராத பரிசாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து 'காலா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த் ஆகாஷ். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் படத்தில் இவரது பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்... ஆம்.. ரஜினியின் ஒரிஜினல் பெயரே தான். மகாராஷ்டிரா பின்னணியில் நிகழும் கதை என்பதால் ரஜினியின் சொந்தப்பெயரை அரவிந்த் ஆகாஷ் கேரக்டருக்கு சூட்டிவிட்டாராம் பா.ரஞ்சித்.