Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் - கிரீடத்துடன் விமானத்தில் பயணித்த என்டிஆர்

17 ஜூன், 2017 - 13:09 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-NTR

தமிழ்த் திரையுலகத்தில் எம்ஜிஆர், எந்த அளவிற்கு புகழ் வாய்ந்த நடிகராக இருந்தாரோ, அதே அளவிற்கு தெலுங்குத் திரையுலகத்தில் என்டிஆர் இருந்தார். பல தமிழ்ப் படங்களிலும் நடித்த என்டிஆர், சென்னையில் தான் நீண்ட காலம் வசித்து வந்தார். அரசியலில் இறங்க முடிவு செய்த பின் தான் ஐதராபாத்திற்குச் சென்றார். அதோடு, சென்னையில் செயல்பட்டு வந்த தெலுங்குத் திரையுலகத்தையும், பல சலுகைகளைக் கொடுத்து ஆந்திராவிற்கே அழைத்துச் சென்றுவிட்டார்.


படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் நேரம் தவறாமை, பொறுப்பு என என்டிஆர் அவ்வளவு நேர்மையாக இருப்பாராம். இது பற்றிய தகவலை சமீபத்தில் நடந்த 'கௌதமி புத்ர சாதகர்ணி' டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை லதா பகிர்ந்து கொண்டார். காஷ்மீரில் ஒரு முறை படப்பிடிப்பு நடைபெற்ற போது கூட முதல் ஆளாக காலை 7 மணிக்கே ஷுட்டிங் வந்துவிடுவாராம். அதன்பின் அவரிடம் கேட்டுக் கொண்ட பின்தான் 9 மணிக்கு மேல் மாற்றினாராம்.


அது போல மற்றுமொரு சம்பவத்தைப் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். அந்த சம்பவத்தை அவரது படங்களில் நடிக்கும் போது நகைச்சுவை நடிகர் நாகேஷ் தெரிவித்ததாகச் சொன்னார். அப்போதெல்லாம் ஐதராபாத்தில் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு குறைவாகத்தான் நடக்குமாம். ஒரு படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த, காலை 6 மணி அளவில் சென்னையில் இருந்து அனைவரும் விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்களாம்.


ஆனால், நாகேஷ் கொஞ்சம் தாமதமாகச் சென்றாராம். அவருக்காக விமானத்தை கிளப்பாமலே காத்திருந்தார்களாம். நாகேஷ் விமானத்திற்குள் சென்ற போது என்டிஆரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாராம். அவ்வளவு காலையில் முழு மேக்கப்புடன், தலையில் கிரீடம் வேறு அணிந்து கொண்டு விமானத்தை விட்டு இறங்கியதும் ஸ்டுடியோவுக்குச் சென்று படப்பிடிப்பை உடனே ஆரம்பிக்கும் அளவிற்கு இருந்தாராம். அப்படியென்றால் அவர் எத்தனை மணிக்கு எழுந்து மேக்கப் போட்டிருப்பார் என நாகேஷ் யோசித்திருக்கிறார்.


ஏன் இப்படி என்று கேட்டதற்கு, ஐதராபாத் சென்று அதன்பின் மேக்கப் போட்டு படப்பிடிப்பை ஆரம்பித்தால் மதியம் ஆகிவிடும். எனவே, இங்கிருந்தே மேக்கப்போடு சென்றுவிட்டால் உடனே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமே என்றாராம். என்டிஆரின் அந்தத் தொழில்பக்தி நாகேஷை அந்த அளவிற்கு மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாம்.


அப்படி தயாரிப்பாளர்களை வாழ வைத்த என்டிஆர் போன்று நடித்த நடிகர்கள் மத்தியில் இன்று, தன்னை எஸ்டிஆர் என்று அழைத்துக் கொள்பவர்கள் தயாரிப்பாளர்களைத் தவிக்க விடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in