ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இவர், அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவனை புடி என்ற படத்தில் நடித்தார். இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு 11 வயதில் சான்வி என்ற மகள் இருக்கிறாள்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் பெங்களூர் நீதிமன்றத்தில் சுதீப்-பிரியா இருவரும் விவாகரத்து மனுதாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து அவர்களின் விவாகரத்து வழக்கு 9 முறை விசாரணைக்கு வந்தபோதும், அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லையாம். இதன்காரணமாக, அவர்களின் வழக்கறிஞரிடம், அடுத்த விசாரணையின்போது அவர்கள் இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி எச்சரித்துள்ளாராம்.
மேலும், கடந்த சில மாதங்களாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தபோதும், மகள் சான்வி மீது அதிக பாசம் கொண்ட சுதீப்பால் அவரை பிரிய முடியவில்லையாம். ஒருவேளை விவாகரத்தாகி விட்டால் அதன்பிறகு மகளையும் தன்னிடமிருந்து நிரந்தரமாக பிரித்து விடுவார்கள் என்பதால் விவாகரத்து மனுவை ரத்து செய்து மறுபடியும் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளாராம் சுதீப். இதையடுத்து அவர்களது இரண்டு குடும்பத்தினரும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.