‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திரைப்படங்களை தியேட்டரில் திரையிடுவதற்கு கியூப் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் சங்க அவசரக்கூட்டத்தில் பேசிய விஷால் "இனி கியூப் கட்டணம் கணிசமாக குறையும், குறைந்த கட்டணத்தில் செய்து தர பல நிறுவனங்கள் முன்வந்துள்ளது. ஆனாலும் இதற்கு சில தடங்கல்ளை கொடுக்கிறார்கள்" என்று பேசினார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். க்யூப் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், புதிதாக முதலீட்டாளர் ஒருவரைப் பிடித்துள்ளார். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 22,500 வாங்கக்கூடிய இடத்தில் 5000 ரூபாயும் மற்றும் சிறுபடங்களுக்கு 22,500 ரூபாய்க்கு பதிலாக 2,500 ரூபாய்க்கும் அளிக்க ஒரு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு நமக்கு தேவைப்படுகிறது. இந்த முடிவால் சிறுமுதலீட்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பயனாக இருக்கும். அவர்களுடைய மொத்த பாரமும் கீழே இறக்கி வைத்துவிடக்கூடிய சூழல் ஏற்படும். அப்படியொரு சூழலை ஏற்படுத்துவதற்கு பெரிய படங்கள் மற்றும் சிறு படங்கள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஒற்றுமையை முதலில் கடைபிடிக்க வேண்டும்.
இனிமேல் 22,500 ரூபாய் கட்ட மாட்டோம். 5000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் மட்டுமே கட்டுவோம் என்ற முடிவை எடுக்க வேண்டும். அதை மீறும் தயாரிப்பாளர்கள், ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு செய்யும் துரோகமாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும். அப்படி யாராவது முறியடிக்க வேண்டும் என நினைத்தால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என முடிவு எடுத்தால்தான் இந்த க்யூப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும்.
50 சதவிகித திரையரங்க உரிமையாளர்கள் தான் தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதர திரையரங்கு உரிமையாளர்களுடைய போக்கு வேறு மாதிரியுள்ளது. அப்படி ஒரு சூழல் இருக்கும் போது, இப்பிரச்சினையைச் சொல்லி புரிய வைக்க வேண்டும். உங்களுடைய ஆதரவும், முழு ஒத்துழைப்பும் இந்த க்யூப் விஷயத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இதை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு ஞானவேல்ராஜா தனது ஆடியோ மெசேஜில் கூறியுள்ளார்.