'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகையான ஷோபனா, கமல் நடிப்பில் வெளியான "எனக்குள் ஒருவன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாது நடனத்திலும் கை தேர்ந்தவரான ஷோபனா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்போது இவருக்கு 47 வயதாகிறது. திருமணமே வேண்டாம் என்று இருந்தவர், அனந்த நாராயிணி என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், ஷோபனாவிற்கு திருமணம் ஆசை வந்திருப்பதாகவும், உறவுக்காரரும், நண்பருமான ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஷோபனாவை தொடர்பு கொள்ள முற்பட்டபோது பதில் இல்லை.