'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பொதுவாக அறிமுக ஹீரோக்கள் அது வாரிசு நடிகர்களாக இருந்தாலும் சரி, முட்டி மோதி சினிமாவில் வாய்ப்பு தேடிய நடிகராக இருந்தாலும் சரி, தங்களது அறிமுகப்படமே வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் அடுத்ததாக அந்த இயக்குனருடன் இன்னொரு படத்தில் இணைந்து பணியாற்றுவது என்பது ஆளாளுக்கு மாறுபடவே செய்கிறது. சிலர் முதல் ஹிட் கொடுத்ததுமே அடுத்த படத்திலும் இணைவார்கள். இன்னும் சிலர் நல்ல கதையும் அதற்கான நல்ல நேரமும் அமையட்டும் என காத்திருப்பார்கள்.
நடிகர் துல்கர் சல்மான் விஷயத்திலும் இதுதான் இப்போது நடந்துள்ளது. துல்கர் சல்மானின் அறிமுகப்படமான 'செகன்ட் ஷோ' வெற்றிப்படமாக அமைந்தது. மம்முட்டியின் மகனை நாம் அறிமுகப்படுத்துகிறோம், நம்மை நம்பி அவரை ஒப்படைத்திருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் படத்தை இயக்கி ஹிட்டாக்கினார் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இத்தனைக்கும் இவரும் அறிமுக இயக்குனர் தான், இந்த இடைப்பட்ட காலத்தில் துல்கர் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்ட நிலையில், ஸ்ரீநாத் ராஜேந்திரனோ, மோகன்லால், வைத்து 'கூதரா' என்கிற பிளாப் படத்தை மட்டுமே கொடுத்துள்ளார்.. இந்நிலையில் துல்கர் சல்மானை வைத்து இவர் மீண்டும் படம் இயக்குவது உறுதியாகியுள்ளது.. அதை துல்கர் சல்மானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.