ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நம்மூரில் பவர்ஸ்டார் என்கிற பெயரில் ஒரு சீனிவாசன் திரையுலகில் ரணகளம் பண்ணிக்கொண்டு இருப்பது போல, மலையாளத்தில் சந்தோஷ் பண்டிட் என்கிற பெயரில் ஒரு பவர்ஸ்டார் இதேபோல உலா வந்து கொண்டு இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் பஞ்ச் வசனம் ஒரே அடியில் பத்துபேரை தூக்கி எறிவது என ஜெகஜால வித்தைக்கு சொந்தக்காரர் தான் இந்த சந்தோஷ் பண்டிட். ஆனால் சமீபத்தில் இந்த சந்தோஷ் பண்டிட் செய்த காரியம் இவர் மீதான பார்வையையே மாற்றிவிட்டது..
ஆம்... கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள தலித் மக்கள் வசிக்கும் பகுதியான 'கோவிந்தபுரம் காலனி' என்கிற பகுதியை தத்தெடுத்துக் கொண்டுள்ளார் சந்தோஷ் பண்டிட். அதுமட்டுமல்ல தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் தான் நடித்து வரும் 'மாஸ்டர் பீஸ்' மற்றும் தான் நடித்துள்ள ஒரு தமிழ்ப்படம் என இந்த இரண்டு படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை அந்த காலனி மாணவர்களின் படிப்பு செலவுக்காக அப்படியே வழங்கிவிட்டார் சந்தோஷ் பண்டிட். ஆள் தான் காமெடியாக நடிக்கிறாரே என்று நினைத்தால், உண்மையிலேயே சீரியசான சமூக ஆர்வலர் தான் என நிரூபித்துள்ளார் சந்தோஷ் பண்டிட்.