ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், தெலுங்கில் கதை, திரைக்கதை என மற்ற வேலைகளையும் இயக்குனரே பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மலையாள சினிமாவில் தான் கதாசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மலையாளத்தில் வெளியாகும் எண்பது சதவீத படங்களுக்கு கதாசிரியர் ஒருவராகவும், இயக்குனர் ஒருவராகவும் தான் இருக்கிறார்கள்.. இது பல வருடங்களாக இருந்து வரும் விஷயம். ஆனால் இதற்கு மத்தியிலும் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்ரையும் கவனித்து அதே படத்தில் ஒரு நடிகனாகவும் பொறுப்பேற்றுக்கொண்டு தனித்துவமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் தான் கேரள பாக்யராஜ் என அழைக்கப்படும் இயக்குனர் பாலசந்திர மேனன்.
இப்படிப்பட்டவருக்கு தற்போது மேலும் ஒரு கிரீடம் வைப்பது போல இன்னொரு பெருமையும் சேர்ந்துள்ளது. ஆம் கிட்டத்தட்ட 29 படங்களில் ஒரே நேரத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என நான்கு துறைகளையும் கவனித்தவர் என்கிற முறையில் 'வேர்ல்ட் நம்பர் 1' என அவரை புகழ்ந்துள்ளார் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க இயக்குனர் 26 படங்களை இயக்கிய வுடி ஆலன் இடம்பிடித்துள்ளார்.