மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் நயன்தாரா கதாநாயகியாக நடித்த படம் தான் 'ஆரடுகுல புல்லட்'. கோபிசந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை சீனியர் இயக்குனரான பி.கோபால் இயக்கியுள்ளார். இடையில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, அதனால் சிக்கலான நயன்தாராவின் கால்ஷீட் பிரச்சனை எல்லாவற்றையும் சரி செய்து ஒருவழியாக நான்கு வருடங்கள் கழித்து படத்தை முடித்து ரிலீஸ் என்கிற அளவிற்கு கொண்டுவந்தும் விட்டார்கள். ஒரு வழியாக ஜூன்-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் ரீலீசுக்கு முன்பே படத்தின் பைனான்சியர் கோர்ட்டுக்கு போனதால் படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாகிவிட்டது.
இந்தப்படத்தின் தயாரிப்பு செலவுக்காக சென்னையை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய தொகை இப்போது மொத்தமாக ஆறு கோடி ரூபாயாக மாறியுள்ளது. இந்த பணத்தை செட்டில் செய்து விட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார் சென்னை பைனான்சியர். ஆனால் ஏற்கனவே இந்தப்படத்திற்காக கைக்கு மீறி செலவு செய்துவிட்டதால் இந்த ஆறு கோடியை செட்டில் செய்யும் அளவுக்கு தயாரிப்பாளரிடம் பணம் இல்லை.. படம் ஓடியதில் வரும் பணத்தை பைனான்சியருக்கு சேர வேண்டியதை கொடுத்துவிடுகிறோம் என தயாரிப்பாளர் சொல்வதை கேட்க பைனான்சியர் தயாராக இல்லாததால் இந்தப்படம் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.