இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இன்பசேகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் தம்பி ராமைய்யா, தனது மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கவில்லை.
இதுபற்றி தம்பி ராமைய்யா கூறுகையில், என் மகன் உமாபதி அறிமுகமாகும் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் விரும்பினார். ஆனால் அதுகுறித்து டைரக்டர் பிரபுசாலமனிடம் கருத்து கேட்டேன். அப்போது அவர், நீங்கள் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தால் உங்கள் மகன் தெரியாமல் போய் விடுவான் என்று சொன்னதினால் தான் நான் நடிக்கவில்லை. பிரபுசாலமன் சொன்னால் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.
அதேசமயம், இந்த படத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். அவரிடத்தில், என் மகனை உன்னை நம்பி ஒப்படைத்திருக்கிறேன் என்று சொன்னேன். நான் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா என்று நம்பிக்கை கொடுத்தார். படம் முழுக்க என் மகனுடன் பயணித்துள்ளார் கருணாகரன். அவருடைய கேரக்டரும் படத்தில் நன்றாக வந்துள்ளது. என் மகனுக்கு பெரிய சப்போட்டாக இருந்துள்ளார் கருணாகரன். அந்த வகையில், அதாகப்பட்டது மகாஜனங்களே படம் சிறப்பாக உள்ளது. அதனால் என் மகனுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டாகும் என்று நம்புகிறேன் என்கிறார் தம்பி ராமைய்யா.