பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணியின் மூன்றாவது படம் இன்று(ஜூன் 16-ம் தேதி) ஆரம்பமானது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால், ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் முக்கியக் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். மேலும், தன் திருமணத்திற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என சமந்தா மற்றொரு பக்கம் அழுத்தம் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் வெளித் தயாரிப்பில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு தன்னுடைய முன்னாள் மேலாளர் ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்திற்கும் படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொன்ராம் படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அந்த நிறுவனங்களின் படத்தில் நடிக்க உள்ளார்.