பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர்கள் மீது கோபித்துக் கொண்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே ஹீரோக்களாகிவிடுவதுண்டு. அமீர், கரு.பழனியப்பன், ஆர்.கே.சுரேஷ், கே.பாக்யராஜ், சேரன், பார்த்திபன் ஆகியோர் திடீர் ஹீரோக்களானது இப்படித்தான். ஆனால் இது ஒன்றும் புதிதில்ல. 1946ம் ஆண்டே பிரபல தயாரிப்பாளரும், மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அதிபருமான டி.ஆர்.சுந்தரம் திடீர் ஹீரோவாகியிருக்கிறார்.
அப்போது அவர் சுலோச்சனா என்ற படத்தை தயாரித்ததார். இதில் ஹீரோவாக பி.யூ.சின்னப்பாவும், ஹீரோயினாக கே.எல்.வி.வசந்தாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன சேலம் மார்டன் தியேட்டரில் இதற்கென உருவாக்கப்பட்டிருந்த அரங்கில் படப்பிடிப்புக்கு அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் படப்பிடிப்புக்கு ஹீரோ வரவில்லை. இத்தனைக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து சேலம் வந்திருந்தார் பி.யூ.சின்னப்பா. ஆனால் அவர் சம்பளம் தொடர்பான பிரச்னையால் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனால் படப்பிடிப்பு தளமே பரபரப்பானது.
ஆனால் டி.ஆர்.சுந்தரம் நினைத்ததை சாதிப்பவர். இன்றைக்கு இத்தனை மணிக்கு சூட்டிங் என்றால் அது நடந்தே ஆக வேண்டும் என்கிற பிடிவாதக்காரர். திடீரென அவர் ஒப்பனை அறைக்குள் சென்றார். அரை மணி நேரத்தில் படத்தின் கேரக்டரான இந்திரஜித் வேடத்தில் வந்தார். பி.யூ.சின்னப்பா நடிக்க வேண்டிய கேரக்டரில் தானே நடித்தார். இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது.