'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகரின் தம்பி செல்வா. ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கோல்மால் என்ற படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கும் புதிய படத்திற்கு 12.12.1950 என்று பெயர் வைத்துள்ளார். இது ரஜினியின் பிறந்த நாள் ஆகும். இதில் ரமேஷ் திலக், ஆதவன், விஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன், ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அவர்களுடன் தம்பி ராமய்யா, ஜான் விஜய், யோகி பாபு, பொன்னம்பலம், டெல்லி கணேஷ், அஸ்வினி, ரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் பற்றி செல்வா கூறியதாவது:
நான் மிகப்பெரிய ரஜினி ரசிகன். அவரைப் பற்றி ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதால் ரஜினி ரசிகர்களை மையமாக வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்தப் படம்தான் 12.12.1950. ரஜினியின் தீவிர ரசிகர்களான நான்கு பேரின் வாழ்க்கையில் ரஜினியின் படங்கள் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. நான் இதில் கபாலி செல்வா என்கிற குங்பூ மாஸ்டராக நடிக்கிறேன். எனது மனைவியாக அஸ்வினி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் கதையையும், தலைப்பையும் ரஜினி சாரிடம் காட்டி அவர் ஆசீரிவாதம் வாங்கித்தான் படப்பிடிப்பை தொடங்கினேன். இப்போது படப்பிடிப்பு பணிகள் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன் என்றார் செல்வா.