இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை கஸ்தூரி. இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமின்றி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும், அரசியல் தொடர்பாகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கஸ்தூரி டுவீட் செய்த ஒன்று மிகவும் வைரலாகிவிட்டது. அப்படியென்ன டுவீட் செய்தார் கஸ்தூரி...?
அதாவது, "நடிகை கஸ்தூரிக்கும், பெரும்பணக்காரர் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும் என்ன தொடர்பு? கிசுகிசு என்று ஒரு டுவீட் செய்திருந்தார். பிறகு அதே தொடர்பு டிஆர்.பாலுவிற்கும், கஸ்தூரிக்கு உண்டு. கிசுகிசு2 கண்டுபிடிங்க..." என்று கூறியிருக்கிறார். இது வைரலாக ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்ல, சற்று நேரத்தில் அவரே அதற்கு விடையளித்திருக்கிறார்.
"அட, இந்த வம்பு கிசுகிசு வைரலாகிடுச்சே... டிஆர்.பாலுவுக்கும், லட்சுமி மிட்டலுக்கும், எனக்கும் இன்று பிறந்தநாள். அம்புட்டுதேன்" என்று கூறியுள்ளார்.