பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டு குறிப்பிட்ட ஒரு தொகையை அட்வான்ஸாக வாங்கினார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் ரேன்ஜ் மாறிப்போனதால், ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்காமல் தள்ளிபோட்டு கொண்டே இருந்தார். அதன்பிறகு தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு ஞானவேல்ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.
அப்போது ரெமோ படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், அதன்பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மோகன் ராஜாவின் படத்தை தொடர்ந்து பொன் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் 16-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்கவுள்ளது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தை முடித்த பிறகு ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு படம் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை விவேகம் படத்தின் இயக்குநர் சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.