பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்த ரோஜா படத்தில் நாயகியாக நடித்தவர் மதுபாலா. அதன்பிறகு வானமே எல்லை, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ உள்பட பல படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த மதுபாலா, தற்போது இந்தி சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்திற்கு கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகி வரும் இந்தி டிவி தொடர் ஆரம்ப். இதில் மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் தேவசேனாவாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கார்த்திகாவின் அம்மாவாக நடித்து வருகிறார் மதுபாலா. பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதோ அதே அளவுக்கு இந்த சீரியலில் மதுபாலாவின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த தொடர் விரைவில் தமிழிலும் ஒளிபரப்பாக உள்ளது.