இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 5வது சீசன் இப்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. பல மாதங்களாக நடந்து வந்த இந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இருந்து 5 பேரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
இறுதிப்போட்டிகள் நாளை மறுநாள் (17ந் தேதி) மாலை பொதுமக்கள் முன்னிலையில் நடக்கிறது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இலவசம். மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டியின் நடுவர்களாக பாடகி மால்குடி சுபா, சித்ரா, மனோ, பணியாற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.