தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் அஜய்ரத்னம். இவரது மகன் தீரஜ் ரத்னம் இப்போது சினிமா நடிகராகிவிட்டார். மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இதுகுறித்து தீரஜ் ரத்னம் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். நானும் ஐ.பி.எஸ்.க்கு படித்தேன். ஆனால் எனது கவனம் விளையாட்டு, சினிமா என்று திரும்பியது. வெயிட் லிப்டிங் சேம்பியன் ஆனேன். அப்பா 6 அடி உயரம், நான் 6.4 அடி உயரம், சிக்ஸ் பேக்ஸ் உடம்பு, இதை பார்த்து தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள். அப்படியே நடிக்க வந்து விட்டேன். தமிழில் அறிவழகன் இயக்கிய ஆறாதுசினம் படத்தில் அறிமுகமானேன். இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன்.
ஏன் வில்லனாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். என் தோற்றத்துக்கு அதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். சினிமாவில் இளம் வில்லன்கள் குறைவு. அதனால் தான் மும்பையிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்றார்கள். எனவே தான் வில்லனாக நடிப்பது என்று முடிவு செய்தேன் என்கிறார் தீரஜ் ரத்னம்.