தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சண்டை கலைஞராக இருந்து சினிமா நடிகரானவர் பொன்னம்பலம். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் உள்ளார் பொன்னம்பலம். இவர் அதிமுக.,வில் இணைந்து அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக., கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் அந்தக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.வில் தன்னை இணைத்து கொண்டார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொன்னம்பலம் பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்தது பற்றி பொன்னம்பலம் கூறியிருப்பதாவது... "தற்போதைய சூழலில் பா.ஜ.,வால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுக.,வில் ஒழுக்கம் - கட்டுப்பாடு இருந்தது, ஆனால் இப்போது அது இல்லை" என்று கூறியுள்ளார்.