பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டதால், அவர் நடித்து வந்த சபாஷ் நாயுடு படத்தின் பணிகள் முடங்கிப்போனது. சபாஷ் நாயுடு படத்தை முடித்து வெளியிட தற்போது வாய்ப்பு இல்லை என்பதால், அதற்கு முன்னதாக 'விஸ்வரூபம்-2' படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் கமல்.
'விஸ்வரூபம்' முதல் பாகம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பொறுப்பை ஆஸ்கார் ரவிக்கு வழங்கினார், ஆனால், பண விஷயத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளால் பட வேலைகள் தடைப்பட்டிருந்தன. இப்போது அந்த பிரச்சனைகளை தீர்த்து 'விஸ்வரூபம்-2' படத்தை மிக விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் இப்போது அதன் பணிகளில் பிசியாக இயங்கி வருகிறார்!
இந்நிலையில் நேற்று முதல் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் வருகிற ரம்ஜான் திருநாளில் வெளியாகிறது என செய்திகள் வந்தன. ஆனால் இதை கமல் மறுத்துள்ளார். விஸ்வரூபம்-2 டிரைலர் குறித்து கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
"விஸ்வரூபம்-2 டிரலைர் தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி தவறானவை. அதற்கான பணிகள் நடந்து வருகிறது, விரைவில் வெளியாகும். ஹிந்தி உரிமையும் எங்களிடம் தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.
விஸ்வரூபம்-2 படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என கமல் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.