தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமூக வலைத்தளங்கள் மீது நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் தீராத காதல். தங்களைப் பற்றி அடிக்கடி யாராவது எதையாவது விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை. இதற்காகவே அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தையோ, வீடியோவையோ பதிவிட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களாகவே வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ஒரு விஷயத்தை அவற்றில் வைத்திருப்பார்கள். அது பற்றி அவர்களுடைய ரசிகர்களும், சமூக வலைத்தளங்களில் சிலரும் கருத்துக்களைப் பகிர வேண்டும் என்பது அவர்களது ஆசையாக இருக்கும். இது தெரியாமல் பலர் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபகாலமாக பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, சனா ஷேக், ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர் தோல்விகளைக் கொடுத்த ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தள விமர்சனங்களைப் பற்றி கிண்டல் அடித்துள்ளார்.
“என்னுடைய தலைமுடியை நான் சிறிது வெட்டிய போது கடுமையான விமர்சனத்துக்கு ஆளானேன். இயல்பாகவே எனக்கு நீளமான தலைமுடி கிடையாது. எப்போதுமே நான் நீளமான தலைமுடிக்காக 'விக்' அணிந்திருப்பேன். அது தெரியாமல் பலர் என் ஹேர் ஸ்டைலைப் பற்றி விமர்சித்தனர்,” என ஸ்ருதிஹாசன் கிண்டல் செய்துள்ளார்.
இனியாவது ரசிகர்களுக்குப் புரிந்தால் சரி.