தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம் என்கிற படம் உருவாக இருப்பதாகவும், அதில் மோகன்லால் பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி விட்டன. எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய ரெண்டமூழம் என்கிற நாவலை தழுவி எடுக்கப்படும் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்க, பி.ஆர்.ஷெட்டி என்கிற துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் தயாரிக்க இருக்கிறார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அபுதாபி, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கின்றது.
இந்த ஊர்களில் படப்பிடிப்புக்காக பிரமாண்டமான அரண்மனை மற்றும் மகாபாரத நகரங்களின் செட்டுக்களை அமைக்க இருக்கின்றனராம். இதில் ஸ்பெஷலாக ஒரு விஷயத்தையும் செய்ய இருக்கிறார்களாம். அதாவது படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த செட்டுக்களை அப்படியே திரைப்பட பூங்காக்களாக மாற்றிவிட போகிறார்களாம். இதன் போஸ்ட் புராடக்சன் சமயத்தில் இருந்து படம் ரிலீசாவது வரை அந்தப்படத்தின் மேக்கிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் இடம்பெறுமாம். மகாபாரத பூங்காக்கள் என்று சொல்லும் அளவுக்கு அவை புகழ்பெறும் என்றும் சொல்லப்படுகிறது.