ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். 'ரஜினிமுருகன்', 'ரெமோ' ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷுடனும், 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாராவுடனும் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் முதல் முறையாக சமந்தாவுடன் இணைகிறார்.
ஒவ்வொரு படத்திலும் தனக்கு முன்னணி நடிகைகள் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை தன்னுடைய கொள்கையாகவே வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி, இந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியானதன் மூலம் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
பொன்ராம் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்களில் காமெடி தூக்கலாக இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்குகிறாராம் பொன்ராம். இந்தப்படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி எல்லாம் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி 20 நாட்கள் நடக்கவிருக்கிறது.
'ரெமோ', 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் டி.இமானுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தில் இமானுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் - பொன்ராம் - இமான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர்.