அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் படம் 'நரகாசூரன்'. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணை தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப்படம் உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
நரகாசுரன் படத்தை நேரடி தெலுங்குப்படம் போல் பிசினஸ் செய்வதற்காக முதலில் நாகசைதன்யாவை கமிட் பண்ணினார்கள். பின்னர் அவர் விலகிக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது சந்தீப்கிஷன் நடிக்கிறார். யாருடா மகேஷ், 'மாநகரம்' ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் அறம் செய்து பழகு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நரகாசுரன் படத்துக்கு சந்தீப் 1 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கலைஞர்கள், பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வருகிற 18-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக நரேன் கார்த்திக் தெரிவித்துள்ளார். 'நரகாசூரன்' அடுத்த ஆண்டு (2018) சம்மர் ரிலீசாக வரவிருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.