விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்க 2011ம் ஆண்டு பிரம்மாண்டமான பூஜையுடன் ஆரம்பமான படம் ராணா. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதன் பின் பல மாதங்கள் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஓய்வெடுத்து வந்த பின் அவர், கோச்சடையான், கபாலி, 2.0 படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டினார். ராணா படம் சரித்திரப்படம் என்பதால் ரஜினியின் உடல்நலம் கருதி அந்தப் படத்தைத் தொடர வாய்ப்பில்லை என்று கருதி அந்தப் படத்தை டிராப் செய்துவிட்டனர்.
நேற்று நடந்த கௌதமி புத்ர சாதகர்ணி படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ராணா படத்தை 277 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அதன்பின் பல தொழில்நுட்ப வசதிகள் திரையுலகத்தில் வந்துவிட்டன. இந்த வசதிகளால் ராணா படத்தை 150 நாட்களில் முடித்துவிட முடியும். கௌதமி புத்ர சாதகர்ணி படத்தை 79 நாட்களில் முடித்திருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எனக்கும் அவ்வளவு சீக்கிரம் எப்படி முடிக்க முடிந்தது என்பதற்கான ஆலோசனையை படத்தின் இயக்குனர் க்ரிஷ் சொல்ல வேண்டும், ” என்று கேட்டுக் கொண்டார்.
ஒரு வேளை ராணா படம் ஒரு சரித்திரப் படமாக உருவாகி 2012ம் ஆண்டு திட்டமிட்டபடி வந்திருந்தால் தென்னிந்தியத் திரையுலகத்தில் பாகுபலி படம் ஏற்படுத்திய சாதனைக்கு முன்பாகவே ராணா மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கலாம்.
கே.எஸ்.ரவிக்குமார் நேற்று பேசியதைப் பார்த்தால் எதிர்காலத்தில் ராணா படத்தை அவரும், ரஜினிகாந்தும் மீண்டும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது.